சுயத்தை இழந்து
சுமை பல சுமந்து
அயத்திடை சிறந்திட
அயராது உழைத்திடும்
அடிமைகளாய் நாம்
கனவுகள் காற்றோடு
சிந்தைகள் சிதையோடு
புதுமைகள் புற்றோடு
பதுமைகளாய் பற்றின்றி
மறைந்திடும் நாம்
புதுமை பேசிடின் பித்தன்
புயலிடை இயையுற்றவன் பக்தன்
புரிந்திடா அறிந்திடா
புண்ணியவான்களாய்
புவிதனில் நாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக